follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

Published on

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளை தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீடொன்றின் பின்புறம் இருந்து 60 மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்ட விசாரணையில் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சியின் இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து கண்டனம்

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில்...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...