follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

Published on

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளை தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீடொன்றின் பின்புறம் இருந்து 60 மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்ட விசாரணையில் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சியின் இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...