follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்

Published on

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 இஞ்சி மூடைகளை தமிழக சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மரைக்காயர்பட்டிணம் கடற்கரை ஓரமாக உள்ள வீடொன்றின் பின்புறம் இருந்து 60 மூடைகளில் சுமார் 2 தொன் எடை கொண்ட இஞ்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், முதல் கட்ட விசாரணையில் இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சியின் இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இஞ்சி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போது கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை எனவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...