follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2எம்.பிக்களுக்கான வாகன பேர்மிட் இற்காக எம்.பிக்களுள் பிளவு

எம்.பிக்களுக்கான வாகன பேர்மிட் இற்காக எம்.பிக்களுள் பிளவு

Published on

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி நிலவி வருவதால் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாதுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கூறிய நிலையில், அதனை பெறக்கூடாது என மற்றைய தரப்பினர் கூறியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தருணத்தில் எம்.பி.க்கள் வரியில்லா வாகன உரிமம் பெற்றால் அது மக்களை வெறுப்படையச் செய்யும் என அரசின் ஒரு தரப்பு கூறுகிறது.

இது அரசாங்கத்தின் வாக்காளர் தளத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பல வருடங்களாக வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்த நேரத்தில் அதனை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என அரசாங்கத்தின் மற்றுமொரு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு முன்னர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் கையளித்தனர். பின்னர் சபாநாயகரால் ஜனாதிபதியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காவிடின் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...