follow the truth

follow the truth

May, 19, 2025
HomeTOP2அடுத்த வாரம் நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி பால் சோறாம்..

அடுத்த வாரம் நாடு முழுவதும் பட்டாசு கொளுத்தி பால் சோறாம்..

Published on

அடுத்த வாரம் பட்டாசு கொளுத்தி பால் சோறு சாப்பிடுவதற்கு அரசாங்கங்கள் தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக எதிர்வரும் 27 அல்லது 28ஆம் திகதிகளில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ள நிலையில், இந்த கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு சர்வதேச நிதிச் சந்தையில் முக்கிய அங்கத்துவ நாடாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாகவும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒரு நாடு திவாலானதா இல்லையா என்பதை சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிலையங்களே தீர்மானிக்கின்றன என்றும் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...