follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2வீட்டு வாடகை செலுத்த முடியாமல் 56 எம்பிக்கள், அமைச்சர்கள்

வீட்டு வாடகை செலுத்த முடியாமல் 56 எம்பிக்கள், அமைச்சர்கள்

Published on

தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 56 அமைச்சர்கள் தங்களுடைய தங்குமிடத்துக்காக 37 லட்சம் ரூபாய் (வாடகை நிலுவை) செலுத்தத் தவறியுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 14 இலட்சத்திலான 19 நிலுவைகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை 35 வீடுகளில் இருந்து கிட்டத்தட்ட 23 இலட்சம் பணம் வரைக்கும் வசூலிக்கப்படவில்லை எனவும், 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜயவதனகம வீடுகளில் வசித்த 18 அரச அதிகாரிகளிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயும் வசூலிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 நிறுவனங்கள் 33 கோடிக்கு மேல் கட்டிட வாடகையை அமைச்சுக்கு செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை நிலுவையில் 18 சதவீதம், அதாவது 6 கோடிக்கு மேல் அரசு பங்களாக்கள், சுற்றுலா பங்களாக்கள், அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புகள் ஆகியவற்றில் இருந்து நிலுவை உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2023 ஆண்டு அறிக்கையில் உள்ளடங்கிய கணக்காய்வு அறிக்கைகளைக் குறிக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...