நாட்டின் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் தொழில்சார் அமைப்பான நீதிச் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையூடாக தமது பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகள் குழு முன்னிலையில், குறித்த சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளரை அழைத்து விசாரணை நடத்தி உரிய தீர்ப்பை வழங்குமாறு நீதி அமைச்சர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.