follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும்.

Published on

நமது நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டதாக நாட்டினை ஆள்பவர் தவறான கற்பிதங்களை தெரிவித்து வருகின்றார். நாட்டை ஆள்பவருக்குக் கூட இது குறித்த சரியான புரிதலும், நிபந்தனைகள் குறித்த தகவல்களும் தெரியாது. நாட்டை ஆள்பவர்களால் அல்லது மக்களால் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு விட்டோம் என தீர்மானித்து அறிவிப்புக்களை விடுக்க முடியாது.

சர்வதேச நிதி மதிப்பீட்டகங்கள், அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களே உரிய மதிப்பீடுகளின் பிரகாரம் அறிவிப்பை விடுக்கும். இந்நிறுவனங்கள் அறிவியல், இலக்க மற்றும் தரவுகளை மையமாக வைத்து, நிதித்துறையின் பொருளாதார பின்னணி எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களை ஒப்பிட்டாய்ந்து, வங்குரோத்து நிலையிலிருந்து வெளிவந்து விட்டதா? இல்லையா? என்பதை முடிவு செய்யும்.

உண்மையான தரவுகளை நாட்டுக்கு வழங்க முடியாத ஒரு தலைமைத்துவம் இருக்கும் போது, ​​நாட்டுக்கு பொய் சொல்லி, நாட்டை ஆள்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை குடிமக்களே தீர்மானிக்க வேண்டும். வங்குரோத்தான நாட்டில் உண்மையைப் பேச வேண்டும். உண்மை நிலை தெரிய வேண்டும். தந்திரமான அரசியல் முடிச்சுக்களைக் கையாண்டு தமது இருக்கையை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணப்பாட்டில் இருக்காது, இந்தப் பயணத்தின் ஒரே நோக்கம் 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதாக இருக்க வேண்டும்.

இந்த தூய நோக்கத்துடன் தேசிய நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...