follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாடசாலை, மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் தரமற்ற உணவுகள்

பாடசாலை, மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் தரமற்ற உணவுகள்

Published on

பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

பாடசாலை மற்றும் மருத்துவமனை சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறைந்ததாக எழுந்துள்ள பொதுமக்களின் முறைப்பாடுகளின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலை சிற்றுண்டிச்சாலை கொள்கை வழிகாட்டுதல்களின் கீழ், வறுத்த, அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை கட்டுப்படுத்தவும், அத்துடன் நொறுக்குத் தீனிகளை அகற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பாடசாலை மருத்துவமனை கேன்டீன் உணவுகளின் தரம் குறித்த முறைப்பாடுகள் இருப்பின் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு (MOH) நேரடியாகத் தெரிவிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலை மருத்துவமனை கேன்டீன்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் இருந்தால் 0112112718 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நேரடியாக முறைப்பாடு அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...