follow the truth

follow the truth

June, 21, 2025
HomeTOP2ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தனி வேட்பாளர் நிச்சயம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தனி வேட்பாளர் நிச்சயம்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளர் நிச்சயமாக முன்வைக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி தெரிவித்தார்.

அப்போது இருந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டு வந்ததாக கூறிய திஸ்ஸ குட்டியாராச்சி, ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் ரோஹித அபேகுணவர்தன இருந்தாலும் அந்த பணியை காஞ்சன ஷெஹான் சரியாக செய்வார் என்றும் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அகலவத்தை தொகுதி மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

வரிசையை நிறுத்தியவர்களோ, இரண்டு ஐம்பதுக்கு உணவு கொடுத்தவர்களோ, பால் மா பாக்கெட்டின் விலையைக் குறைத்தோ, ஒருவரைக் கொன்றோ தலைவர்களை நியமிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாமலை அழைத்து வர முற்படும் போது, ​​அவர் இன்னும் இளம் காயாக இருப்பதாக கூறுகின்றனர். அவர் எங்கே இளம் காயாக இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று திஸ்ஸ குட்டியாராச்சி கூறினார்.

அநுரகுமாரவிடம் பொருளாதாரக் கொள்கை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வருகிறார் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk), அடுத்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ...

தரமற்ற சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடிக்கு 400,000 ரூபாய் அபராதம்

தரநிலைகளுக்கு இணங்காத சிவப்பு சீனியை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 400,000 ரூபாய் அபராதம் விதித்து நீர்கொழும்பு...

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு 154 மில்லியன் ரூபா மதிப்புள்ள அதிநவீன சிகிச்சை இயந்திரம்

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் நிறுவப்பட்ட புதிய காமா கேமரா அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய...