சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
இன்று (01) முதல் மாணவர் விசா கட்டணம் இலங்கை மதிப்பில் ஒரு இலட்சத்து 46 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.
மேலும், தற்காலிக விசா பயன்படுத்தும் பயணிகள், தற்காலிக பட்டதாரிகள், கப்பல் குழு பணியாளர் விசா பயனாளர்கள் ஆகியோர் மாணவர் விசாவை இனி பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொண்டு வந்துள்ள மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரத்தை மேம்படுத்தவும், இடம்பெயர்வை குறைவாகவும், சிறப்பாகவும் மாற்ற ஆஸ்திரேலியாவிற்கு உதவும் என்றும் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.