follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP2மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் - மஹிந்த

மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் – மஹிந்த

Published on

மக்களிடமிருந்து தலைவர்கள் உருவாகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்குமா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தெரிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற “அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளை பிரகடனப்படுத்துவதற்கான 70வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில்” பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்பும் போது மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வான் யீ ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாகவும், சீன அரசாங்கம் இலங்கை தொடர்பில் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளதாகவும் அது தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆர்.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கையின் ஜனநாயகத்துக்கும் பாரிய இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...