follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் - மஹிந்த

மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் – மஹிந்த

Published on

மக்களிடமிருந்து தலைவர்கள் உருவாகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்குமா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தெரிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற “அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளை பிரகடனப்படுத்துவதற்கான 70வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில்” பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்பும் போது மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வான் யீ ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாகவும், சீன அரசாங்கம் இலங்கை தொடர்பில் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளதாகவும் அது தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆர்.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கையின் ஜனநாயகத்துக்கும் பாரிய இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...