follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் - மஹிந்த

மக்கள் மத்தியில் இருந்தே தலைவர்கள் உருவாகிறார்கள் – மஹிந்த

Published on

மக்களிடமிருந்து தலைவர்கள் உருவாகிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்குமா என ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை பொதுஜன பெரமுன இன்னும் தெரிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

சீனாவின் பீஜிங்கில் நடைபெற்ற “அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளை பிரகடனப்படுத்துவதற்கான 70வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில்” பங்கேற்றுவிட்டு இலங்கை திரும்பும் போது மஹிந்த ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய மஹிந்த ராஜபக்ஷ சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வான் யீ ஆகியோருடன் கலந்துரையாடியதாகவும், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாகவும், சீன அரசாங்கம் இலங்கை தொடர்பில் நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளதாகவும் அது தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆர்.சம்பந்தனின் மறைவு தமிழ் மக்களுக்கும் பொதுவாக இலங்கையின் ஜனநாயகத்துக்கும் பாரிய இழப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...