follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2நான் வீழ்வேன் என நினைத்தாயோ

நான் வீழ்வேன் என நினைத்தாயோ

Published on

திசைகாட்டி (தேசிய மக்கள் சக்தி) மீது பாறைகளையோ அல்லது மண்ணை வீசியோ எதிரிகள் எங்களை வீழ்த்தி விட முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வெள்ளத்தினை அவமானப்படுத்துவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது உறுதியாகியுள்ளது என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத் தொடரின் முதலாவது களுத்துறை மாவட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, 21ஆம் நூற்றாண்டிற்கு, எமது நாடு ஒரு புதிய மறுமலர்ச்சிக்கான பாய்ச்சலை எடுக்க வேண்டும், எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அல்லது தேர்தலில் வெற்றி பெறுவது மாத்திரமல்ல, இதனைக் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டில் புதிய பாய்ச்சலுக்கு அனைத்து சக்திகளும் ஒன்று சேரும் வாய்ப்பு

மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வரை சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், மக்கள் காலூன்றி நிற்கும் வகையில் நாட்டில் உற்பத்திப் பொருளாதார நிலைமை உருவாக்கப்படும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...