கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்களை ஆராய்வதற்காக விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதான கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களை கண்காணித்து நீர் வடிகால் தடைகளை கண்டறிய எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹிரான் பாலசூரிய தெரிவித்தார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய கம்பஹாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற மும்முனை வேலைத்திட்டம் அடையாளம் காணப்பட்டு குறுகிய கால தீர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணும் பணியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறுகிய கால தீர்வுகள் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, இடைக்கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு அனுமதியற்ற மற்றும் முறையற்ற கட்டுமானங்கள் காரணமாக அத்தனகல்லு படுகையில் தற்காலிக நீர் பிடிப்பு பகுதிகள் வேகமாக குறைந்து வருகின்றன.