follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP2அங்கொடையா வெலிக்கடையா, வெறியான மைத்திரி

அங்கொடையா வெலிக்கடையா, வெறியான மைத்திரி

Published on

சுதந்திரக் கட்சியின் நெருக்கடிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு சென்றவர்களே காரணம் என முன்னாள் ஜனாதிபதி பொலன்னறுவை மாவட்ட சபை உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன:-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசிடம் சென்ற அமைச்சர் ஒருவர் நான் இறுதியாக அங்கொட அல்லது வெலிக்கடையில் தான் போய் சேருவதாக கூறியிருந்தார். அரசாங்கத்தின் தற்போதைய அமைச்சர்கள் இந்தப் பிரச்சினையை கையில் எடுத்து நீதிமன்றில் செல்வாக்கு செலுத்தி என்னை சிறைக்கு அனுப்ப முயற்சிப்பார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.

இவற்றின் பின்னணியில் அரசாங்க அமைச்சர்கள் உள்ளனர். இலங்கையின் மீட்சிக்காக உயிரை தியாகம் செய்கிறோம் என்றே கூற வேண்டும்.

அரசியல் கட்சியில் நெருக்கடி என்பது புதிதல்ல. கட்சிகள் நெருக்கடியை தீர்க்க விடாமல் அரசின் தலையீட்டில் செய்யும் செயல்பாடுகளை கண்டிக்கிறோம்.

எங்கள் கட்சியின் பிரச்சினைகளுக்காக நீதிமன்றத்தின் மீது காவல்துறையை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்?

அமைச்சர் மஹிந்த அமரவீர:-

அங்கொடையோ வெலிக்கடையோ அங்கொடைக்குப் போக வேண்டியவர்கள் அங்கொடைக்குப் போவார்கள் என்று நான் கதைக்கவில்லை. தொடர்பில்லாத ஒருவரிடம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒப்படைக்கப்பட்டது. தயாசிறியை நாங்கள் நீக்கினோமா?

மைத்திரிபால சிறிசேன:-

இவர்கள் ஆட்சிக்கு சென்று அமைச்சர்களாக பதவியேற்றதுதான் இந்த கட்சியின் அழிவின் ஆரம்பம். தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் மீது சாய்ந்து கொள்ளப் போகிறது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண:-

நாங்கள் ஆட்சிக்கு சென்றதால் இந்த கட்சி அழிந்துவிடவில்லை.

மஹிந்த அமரவீர:-

வெள்ளைக்காரர்கள் போல் பேசுபவர்களின் திருட்டுகள் எதிர்காலத்தில் பெயர்கள், ஊர்களுடன் வெளிப்படும்.

மைத்திரிபால சிறிசேன:-

அவர்கள் கூறுவது பொய்யானது.

மஹிந்த அமரவீர:-

142 எம்.பி.க்களுடன் இருந்த கட்சி இரண்டாகக் குறைந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகை – நாடு முழுவதும் 7437 தன்சல்கள் பதிவு

வெசாக் பண்டிகைக்காக தற்போது 7,437 தன்சல் ஏற்பாட்டாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூர்...

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்து – விசாரணை ஆரம்பம்

மாதுரு ஓயாவில் பெல் 212 ரக ஹெலிகொப்டர் விபத்திற்குள்ளானமைக்கான உறுதியான காரணத்தை விசாரணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் வௌிப்படுத்த முடியும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...