follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு டலஸ் ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு டலஸ் ஆதரவு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கிறது. அதன்படி, தற்போது ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் பல பங்குதாரர்கள் உள்ளனர். முன்வருவதற்கான திட்டங்கள் உள்ளன. இது ஒரு வலுவான மற்றும் பரந்த சக்தியாகும். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளோம், நாமும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், ஒரு வலுவான அணி மற்றும் திட்டத்தை முன்வைப்போம்..”

அரசாங்கத்தை தோற்கடிக்கும் போராட்டத்தில் சுதந்திர மக்கள் காங்கிரஸினால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றியடைந்ததாகவும் சரித ஹேரத் கூறுகிறார்.

நாட்டில் பரந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்வரும் சில வாரங்களில் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...