follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு டலஸ் ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு டலஸ் ஆதரவு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டத்திற்கு ஆதரவளிக்க சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவில்லை. ஜனாதிபதி வேட்பாளரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கிறது. அதன்படி, தற்போது ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற பெயரில் பல பங்குதாரர்கள் உள்ளனர். முன்வருவதற்கான திட்டங்கள் உள்ளன. இது ஒரு வலுவான மற்றும் பரந்த சக்தியாகும். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளோம், நாமும் அவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், ஒரு வலுவான அணி மற்றும் திட்டத்தை முன்வைப்போம்..”

அரசாங்கத்தை தோற்கடிக்கும் போராட்டத்தில் சுதந்திர மக்கள் காங்கிரஸினால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் நடத்திய கலந்துரையாடல் மிகவும் வெற்றியடைந்ததாகவும் சரித ஹேரத் கூறுகிறார்.

நாட்டில் பரந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்வரும் சில வாரங்களில் எதிர்க்கட்சிகளுடன் நேரடியாக இணைந்து செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...