follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP2வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார் - ரயில் நிலைய அதிபர்கள் சவால்

வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார் – ரயில் நிலைய அதிபர்கள் சவால்

Published on

சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணையவுள்ளன. ரயில் நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து. அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு அந்தந்த ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை பொருட்படுத்தாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகி சென்றதாக கருதப்படுவார்கள் என ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மறு அறிவித்தல் வரை வட மாகாண ஆசிரிய ஆட்சேர்ப்புக்கு கோரப்பட்ட விண்ணப்பங்கள் இடைநிறுத்தம்

ஆசிரியர் சேவையின் தரம் 3க்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை மறு அறிவித்தல் வரை...

அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியங்கள் இம்மாதம் முதல்

வரவு செலவுத் திட்ட அறிவிக்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு, இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள்...

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...