follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP2அதுருகிரிய தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் தேரரின் கணக்கில் 600 இலட்சம் வரவு.. அநுரவும் அவதானத்தில்..

அதுருகிரிய தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் தேரரின் கணக்கில் 600 இலட்சம் வரவு.. அநுரவும் அவதானத்தில்..

Published on

கிளப் வசந்த கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த நயன வாசல எதிரிசூரிய என்ற நபரின் கணக்கில் 600 இலட்சம் ரூபா பணம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹா மஹாநாம பெயரில் தேரரான இவர், ருவன்வெல்ல கோனகல்தெனிய வஹரக தம்சக் விகாரையின் விகாரையின் தலைவராகவும், இறக்கும் போது கே சுஜீவாவின் கணவராகவும் இருந்தார்.

புலனாய்வு ஊடகவியலாளரான ஸ்ரீ லால் பிரியந்த, இணைய அலைவரிசையுடனான உரையாடலில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

கிளப் வசந்த கொலைச் சம்பவத்துடன் அநுர குமார திஸாநாயக்கவை அரசியல் ரீதியாக அச்சுறுத்தும் குழுக்கள் இவ்வாறு கொலைத் திட்டங்களை முன்னெடுக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிரிழந்த நயனா வாசலா எதிரிசூரிய, தனது தேரர் நிலையின் போது பிரபல்யமான பிரசங்கியாக இருந்து, தனிப்பட்ட நட்பின் அடிப்படையில், கொரோனா காலத்திற்குப் பின்னர், கே.சுஜீவாவுடன் திருமணமானவர்.

இவர் தேரராக இருந்த போது பிரசங்கம் செய்து ஏராளமான சொத்துக்களை சம்பாதித்துள்ளதும், நவீன காரை பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை...

எல்பிட்டிய தேர்தல் – பிரசார பணிகள் நாளையுடன் நிறைவு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள்...