follow the truth

follow the truth

May, 18, 2025
HomeTOP2மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

Published on

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

இது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகந்துரை மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதில், “அண்ணா! ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று எழுதப்பட்டிருந்தது.

இதேவேளை, வசந்தவின் பூர்வீக கிராமமாக இருந்த நுவரெலியா நகரமும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்புக்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...