follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

Published on

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

இது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகந்துரை மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதில், “அண்ணா! ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று எழுதப்பட்டிருந்தது.

இதேவேளை, வசந்தவின் பூர்வீக கிராமமாக இருந்த நுவரெலியா நகரமும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்புக்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...