follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2"எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்.."

“எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துங்கள்..”

Published on

ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்கள் மீது அமெரிக்க பாணியிலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பென்சில்வேனியாவில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற பேரணியின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சித்தமை தொடர்பில் அறிந்த உடனே, சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நேற்று (14) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...