இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கடன் உதவியின் கீழ் இந்நாட்டில் பெருந்தோட்டங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு 60 ஸ்மார்ட் வகுப்பறைகள் பெற்றுக்கொடுப்பது மற்றும் இந்த உதவியின் கீழ் 800 ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் ஸ்மார்ட் பலகைகள் வழங்குவது குறித்து மலையக பெருந்தோட்டத்துறை சமூகத்தின் முன்னேற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் கலந்துரையாடப்பட்டது.
மேலும், பெருந்தோட்டப் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களில் மாணவர்கள் உயர்தரப் படிப்பைக் கற்கக்கூடிய பாடசாலைகள் இல்லாமை குறித்தும் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.