follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டாலும் உள்ளே இருப்பது போன்றதே வெளியில் இருப்பதும்

ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டாலும் உள்ளே இருப்பது போன்றதே வெளியில் இருப்பதும்

Published on

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கபிணையிலும், 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஞானசார தேரருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 4 வருட கடூழிய சிறைத்தண்டனை என்ற தீர்ப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படாது என சட்டத்தரணிகள் கருதுகின்றனர்.

காரணம் அவர் ஏற்கனவே தாக்கல் செய்த பிணைமனு மீதான விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு வந்து ஒரு வேலை ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டால் அவர் பிணையில் விடுதலை செய்யப்படலாம்.

ஒரு வேலை அந்த மேன்முறையீட்டு மனு விசாரணையில் ஞானசார தேரருக்கு பிணை மறுக்கப்பட்டால் 2024-03-28 ஆம் திகதியில் இருந்து 2024-07-18 அவர் அனுபவித்த சிறைத்தண்டனை காலம் கழிக்கப்பட்டு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

எவ்வாறாயினும் ஞானசார தேரர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்த சீராய்வு மனு (ரிவிஷன் பெட்டிஷன்) மீதான விசாரணையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...