follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

ஜனாதிபதி தேர்தல் திகதியை சரியாகக் கணித்த மஹிந்த

Published on

ஜனாதிபதி தேர்தல் திகதி உள்ளிட்ட தேர்தல் அறிவிப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26) வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவரும் வாக்களிக்க வசதியான நாளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆணையம் கூறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் திகதி பற்றி தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கருத்து தெரிவிக்கையில்;

“.. ஜனாதிபதி தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்காவிடின் வானமே இடிந்து விழுந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், செப்டம்பர் 17 ஜனாதிபதி தேர்தல் நடக்காது ஏனெனில் செப்டம்பர் 17 போயா தினம் என்பதால் 18,19ம் திகதிகளில் தேர்தல் இடம்பெறாது. செப்டம்பர் 19ம் திகதிக்குப் பின்னர் தான் பெரும்பாலும் தேர்தல் நடத்தப்படும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...