follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்இத்தாலி பிரதமரின் உயரத்தை கேலி செய்த ஊடகவியலாளர்

இத்தாலி பிரதமரின் உயரத்தை கேலி செய்த ஊடகவியலாளர்

Published on

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2021-ம் ஆண்டு, பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் தன் எக்ஸ் பக்கத்தில், தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

‘ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் மட்டுமே உள்ளீர்கள். என்னால் உன்னைப் பார்க்கவே முடியவில்லை” எனக் கேலி செய்யும் விதமாகப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த கருத்து தொடர்பாக இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்த பத்திரிகையாளர் மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், சமூக ஊடகப் பதிவில் கேலி செய்ததற்காகப் பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ்க்கு மிலான் நீதிமன்றம் தற்போது 5,000 யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...