follow the truth

follow the truth

August, 11, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஎன் மனதில் இருப்பவரை இப்போது கூற முடியாது

என் மனதில் இருப்பவரை இப்போது கூற முடியாது

Published on

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்றும், பொதுஜன பெரமுன முன்வைக்கும் வேட்பாளர் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (23) பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தனது கட்சியில் இருந்து போட்டியிட பல வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன வெற்றிபெறும் நிலையில் இருப்பதாகவும், தாம் மனதில் கொண்டுள்ள வேட்பாளர் யார் என்பதை இப்போது கூற முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...