follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுRAMIS முறையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது - அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

RAMIS முறையை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது – அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published on

வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS)-பராமரிப்பு சேவைகளைப் பெறுதல்’ என்ற 24/0696/604/079 ஆம் இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைய 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையிலான உப குழுவில் அமைச்சர்களான டிரன் அலஸ் மற்றும் நளீன் பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் அமைப்பின் திறம்படப் பயன்பாடு தொடர்பான உடனடித் தலையீட்டின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையில் 7 முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...