follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவாக்காளர்கள் வெறுப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடாது

வாக்காளர்கள் வெறுப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடாது

Published on

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இந்த நாட்டின் 09ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முக்கியமான தேர்தலாக அமையும். தற்போது பழைய அரசியல் கட்சிகள் சம்பிரதாய முறையில் அரசியல் பிரச்சாரத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார்.

சில அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றும் சம்பிரதாய முறையையே பின்பற்றி வருகின்றன. வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டம் மற்றும் பொருளாதார மாற்றச் சட்டம், அரச கடன் முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கியமான சட்டங்களில் உள்ள கொள்கைகளை மீறி தங்கள் கொள்கைகளை பொதுமக்களிடம் முன்வைக்கின்றனர்.

இதனால் இலங்கையை மீளக் கட்டியெழுப்ப முடியாத நிலை ஏற்படும். நாட்டின் நிலைமையை புரிந்துகொண்டு அவ்வாறு செயற்பட வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன். சாதி, மத,அரசியல் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் தேசியத் திட்டத்துக்கு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்,.

தமது தனிப்பட்ட கொள்கை எதுவாக இருந்தாலும், அதனை அவ்வாறே வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் கொள்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தாமல், நாட்டைக் கட்டியெழுப்பும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு இணங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம் அதிகாரத்தைப் பெறுவதற்காக பொதுமக்களிடம் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும். இந்த வீழ்ச்சி அடைந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேறு மாற்று வழிகள் இல்லை. அதன்போது, நாட்டை முதன்மைப்படுத்தி அனைத்து இலங்கையர்களும் ஒன்றிணைவது மிகவும் முக்கியமானது. ஜனநாயக நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் தனது கருத்தை வெளியிடும் சுதந்திரம் உள்ளது. ஆனால் நாட்டை மீண்டும் அவல நிலைக்குத் தள்ளுவதா? இல்லையா? என்பதைத் தெரிவு செய்வதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

வாக்காளர்கள் வெறுப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லக்கூடாது. இந்தத் தேர்தல் யாரையும் பழிவாங்குவதற்காக நடத்தப்பட்ட தேர்தல் அல்ல. இந்த தேர்தல், வாக்குகளை பயன்படுத்தி நாட்டை தோற்கடிப்பதற்கான சந்தர்ப்பம் அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...