follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

நாட்டை கட்டியெழுப்ப உதவிய மஹிந்தவுக்கு நன்றி

Published on

நாட்டைக் கட்டியெழுப்ப முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு முதலில் கோரியதாகவும், அன்றைய தினம் அவர் எடுத்த சரியான தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த போது, ​​நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை தாம் மட்டும் ஏற்கவில்லை எனவும், நாட்டை நேசிக்கும் திறமையான குழுவினர் தன்னுடன் இணைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியதை வலியுறுத்திய ஜனாதிபதி, அந்த குழுவினரால் மட்டுமே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என நாட்டு மக்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...