follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP2"அநுரவின் வெற்றியானது இலங்கையில் சாதனை வெற்றியாக அமையும்.." - சுனில்

“அநுரவின் வெற்றியானது இலங்கையில் சாதனை வெற்றியாக அமையும்..” – சுனில்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை முன்வைத்து நாட்டை சிரிக்க வைத்துள்ளதாக என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த வங்கி மற்றும் நிதி மன்றத்தின் நுவரெலியா மாவட்ட மாநாடு நுவரெலியாவிலுள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிதி முகாமைத்துவ செயற்பாடுகள் குறித்து வங்கி மற்றும் நிதித்துறையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“.. மக்கள் விரும்புவதை மக்கள் புரிந்து கொண்டால் களவு, மோசடி, கொலைகள் அற்ற தலைவர் அநுர குமார திஸாநாயக்க நிச்சயம் வெற்றி பெறுவார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்தி சிரிக்கக் கதை கூறியதை இன்று பார்த்தோம், போராட்டதாரர்கள் இரு இளைஞனை கோரியதாம், அதற்கு ஜனாதிபதியாக்க இளைஞனாக நாமலை களமிறக்கியுள்ளனர்.

அன்று போராடிய தேசப்பற்றுள்ள சமூகம் கோட்டபாய கோ ஹோம் என்றோ ராஜபக்ச கோ ஹோம் என்றும் நாமல் கம் கம் என்று சொல்லவில்லை. .

ரணில் விக்கிரமசிங்கவை மத்திய வங்கித் திருடன் என்று சொன்னவர்களே இன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், ரணில் வங்கித் திருடன் என்று சொன்னவர்கள் அன்று அதே வாய்களால் ரணில் விக்கிரமசிங்கவை ஹீரோவாக செதுக்குகிறார்கள்

அதையெல்லாம் மீறி, நாட்டில் பெரும்பாலான நோய்களுக்கு மருந்து இல்லை, நாட்டில் புற்று நோய்க்கு மருந்து இல்லை.

இவ்வாறானதொரு யதார்த்தம் உள்ள நாட்டில் அரசாங்கத்தின் நெருக்கடியை மக்கள் மீது திணித்து மக்களின் நெருக்கடியை எல்லை வரை கொண்டு சென்று பொருளாதார நெருக்கடியை மூடி மறைக்க ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்.

மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என்று கூறிய அவர்கள் இன்று அவ்வாறு கூறவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த யதார்த்தத்தை பொதுமக்கள் இறுதியாகப் புரிந்துகொண்டுள்ளதால், ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுர குமார திஸாநாயக்க அமோக வெற்றியீட்டுவார் என நம்புகிறோம்.

இந்த வெற்றி இலங்கையில் சாதனை வெற்றியாக அமையும்..” தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...