follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1CT ஸ்கேன், MRI ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு

CT ஸ்கேன், MRI ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழப்பு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது. இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான அறிவித்தல்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிபத்திரங்களை வழங்கும் அனைத்து கருமபூடங்களும் மே 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூடப்படும்...

இதுவரை 43 வேட்பாளர்கள் கைது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை 524 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் விதிமுறைகளை...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...