follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

லால்காந்தவை கைது செய்யுமாறு சிஐடிக்கு முறைப்பாடு

Published on

தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே. டி. லால் காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எவ்வாறாயினும், தாம் வழங்கிய கருத்துக்களில் சிக்கல் இருப்பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு கடுகன்னாவ பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்த இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால்காந்தவை குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என திலித் ஜயவீரவுக்கு ஆதரவான குழுவில் உள்ள பொஹட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆளும் கட்சியை விட்டு வெளியேறி அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் போது நாட்டின் பாராளுமன்றத்தை கைப்பற்ற மக்கள் விடுதலை முன்னணி திட்டமிட்டதாக கே.டி. லால்காந்தவின் பகிரங்க அறிக்கையே அவர் கைது செய்யப்படுவதற்கு முக்கிய காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தன்னை கைது செய்யுமாறு சவால் விடுத்தால், தன்னை கைது செய்து காட்டுமாறு நானும் சவால் விடுக்கிறேன் என லால்காந்த தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாட்டை சமர்ப்பித்த சட்டத்தரணிகள், குற்றவியல் சட்டத்தின் ஆறாவது பிரிவின் பிரகாரம் மரண தண்டனைக்குரிய குற்றத்தை லால்காந்த செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...