follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2சஜித் ஜனாதிபதியான பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி வழங்கப்படும் - நளின்

சஜித் ஜனாதிபதியான பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி வழங்கப்படும் – நளின்

Published on

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் துப்பாக்கி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் விவசாயிகளின் பயிர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் பல்வேறு வன விலங்குகளினால் அழிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை விவசாயிகளுக்கு குறுகிய கால திட்டமாக துப்பாக்கி வழங்கப்படும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...