follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நான் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் - பிரசன்ன

நான் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் – பிரசன்ன

Published on

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், நாடு பங்களாதேஷைப் போன்று மாறிவிடும் எனவும் அமைச்சர் கூறினார்.

மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாது என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் என தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரண்டிருந்த பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக கைகளை உயர்த்தி உறுதியளித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...