follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது - ஜோன்ஸ்டன்

ராஜபக்ஷவை எதிர்த்தவர்களுக்கு சரிப்பட்டு வராது – ஜோன்ஸ்டன்

Published on

பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் மக்கள் வருவார்கள் அதற்கு எல்லாம் தயாராக உள்ளது என்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் அரசியல் ரீதியாக தலை தூக்க முடியாது. அதேபோன்றதொரு விடயம் இன்று சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அடிமட்ட மக்கள் ஒன்று கூடியுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அணுகிய சிலர் மீண்டும் கட்சிக்கு வருமாறு பேசியதாகவும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க மிகக் குறைந்த வாக்குகளுக்கு வீழ்ச்சியடைவார் என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுன ஒரு இளம் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைத்துள்ளதாகவும், அவரைச் சுற்றி அனைவரும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நடந்தது போல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...