follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP2ராஜிதவின் தீர்மானம் இன்று

ராஜிதவின் தீர்மானம் இன்று

Published on

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அவருக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தரப்பில் விசேட பிரதிநிதி மற்றும் முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர்களுடன் நேற்று (12) இரவு பாணந்துறை பிரதேசத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இன்று (13) பிற்பகல் கொழும்பு கங்காராம விகாரையில் சமய வழிபாடுகளை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் பங்குபற்ற தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் ஒருவர்.

முன்னாள் அமைச்சரின் அரசியல் தீர்மானம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியிடன் தொடர்புடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் அவசர அவசரமாக செய்தியாளர் மாநாட்டை நடத்தத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...