ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து அரச ஓய்வூதியதாரர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவு வழங்கப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய செப்டம்பர் மாத கொடுப்பனவுடன் ஒக்டோபர் மாத முதல் கொடுப்பனவு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.