follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

Published on

தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தொழிலாளிக்கு மாதாந்தம் 47,050 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடமைக்காக பல தொழிலாளர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அந்த சேவைக்கு ஒரு காவல் நிலையத்தில் மூன்று பணியாளர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தரத்தைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.

நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

சில கட்சி அமைப்பாளர்கள் பல இலட்சம் ரூபா செலவழித்து கட்அவுட்களை காட்சிப்படுத்தியுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...