follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் தொழிலாளிக்கு ரூ. 47,000

Published on

தேர்தல் சட்டத்தை மீறி நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தொழிலாளிக்கு மாதாந்தம் 47,050 ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கடமைக்காக பல தொழிலாளர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அந்த சேவைக்கு ஒரு காவல் நிலையத்தில் மூன்று பணியாளர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களின் தரத்தைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.

நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.

சில கட்சி அமைப்பாளர்கள் பல இலட்சம் ரூபா செலவழித்து கட்அவுட்களை காட்சிப்படுத்தியுள்ளதாகவும், அவற்றை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...