follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், குருநாகல் ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலாளர் நாயகம் அருட்தந்தை டொன் அன்டன் ஜயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் உள்ளிட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையர்களுக்கு ஜனாதிபதி இதன்போது
தெரியப்படுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...