follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு

Published on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், குருநாகல் ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலாளர் நாயகம் அருட்தந்தை டொன் அன்டன் ஜயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் உள்ளிட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையர்களுக்கு ஜனாதிபதி இதன்போது
தெரியப்படுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...