follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2'பழி வாங்க வரவில்லை, நாட்டை கட்டியெழுப்பவே வருகிறேன்' - அநுர

‘பழி வாங்க வரவில்லை, நாட்டை கட்டியெழுப்பவே வருகிறேன்’ – அநுர

Published on

இலங்கை வரலாற்றின் அரசியல் வரைபடம் முற்றாக மாற்றமடைந்து தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமக்கு வாக்களித்த மற்றும் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்த அனைவரையும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது பயணத்தில் பழிவாங்கும் எண்ணம் இல்லை, நாட்டுக்காக பணி செய்யவே விரும்புவதாக அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

சிலர் ‘ஜனாதிபதி பதவி நெற்றியில் பொறிக்கப்பட்டிருப்பதாக நினைத்து’ வேலை செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...