follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1அடுத்த 02 - 03 வருடங்களில் மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்

அடுத்த 02 – 03 வருடங்களில் மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும்

Published on

நீண்ட காலமாக LNG மின் உற்பத்தி நிலையங்களுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், அதை நடைமுறைப்படுத்தவும் நீண்ட காலம் பிடித்தது. இன்று ஒரு திருப்புமுனையாக ‘லக்தனவி’ நிறுவனம் முன் வந்து முதலீட்டுக்கான முயற்சிகளை மேற்கொண்டதுடன் நாட்டில் வலுசக்தி பாதுகாப்பிற்காகவும் மின்சாரத்துறையின் செலவைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய மின் உற்பத்தி நிலையம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நாட்டில் எத்தனை மணிநேரம் மின்சாரம்
விநியோகிக்கப்படுகிறதோ அதைவிட அதிகமான மணிநேரம்
மின்சாரம் துண்டிக்கப்பட்டதை இன்று பலர் மறந்துவிட்டனர். 2022
ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த நாட்டில் 16 மணி நேரம்
மின்சாரம் தடைப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் இருந்தபோதிலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள், நிலக்கரி மற்றும் பிற பொருட்களை வழங்க முடியவில்லை. மின்சார சபை உட்பட அரச நிறுவனங்கள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தன.

மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்குத் தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு வழங்கினார். அப்போது நாட்டின் தலைவர் என்ற வகையில் அவர் வழங்கிய அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்களின் காரணமாக மின்சாரத் துறையின் செலவை ஈடுசெய்யும் விலைச்சூத்திரத்தை செயற்படுத்தி செலவை ஈடுசெய்ய முடிந்தது.

மின்சார சபைக்கு பணம் செலுத்தும் திறன் இல்லாமல், இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு கிடைக்காது. எனவே இன்று இவ்வாறான பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் எமது மின்சார செலவினங்களை கணிசமான அளவு குறைக்க முடியும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...