follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2தற்செயலாக அநுர வென்றால் ஜனாதிபதியாக 6 மாதங்களே இருப்பார் - ஹிருணிகா

தற்செயலாக அநுர வென்றால் ஜனாதிபதியாக 6 மாதங்களே இருப்பார் – ஹிருணிகா

Published on

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானால், அதிகபட்சமாக 6 மாதங்களுக்கு மட்டுமே அந்த பதவியை வகிப்பார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த அநுர திஸாநாயக்க எம்.பி., மக்களுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காத எம்.பி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒருவரால் தற்போதைய இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என நம்ப முடியுமா? இந்நாட்டில் அதிக பொய்களை பேசும் ஒரு அரசியல்வாதி அநுர குமார என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகபட்சமாக 2 வருடங்கள் பதவி வகிப்பார் என தாம் முன்னர் தெரிவித்திருந்ததாகவும், அவருக்கு எதிரான பல வழக்குகளை வாபஸ் பெறுவதற்காகவே அவர் ஜனாதிபதியானார் எனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எந்த தவறும் செய்யாத மிகவும் சுத்தமான அரசியல்வாதி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...