follow the truth

follow the truth

August, 10, 2025
Homeஉலகம்காற்று மாசுபாடு - இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்

காற்று மாசுபாடு – இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்

Published on

இந்தியாவில் காற்று மாசுபாடு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் காற்று மாசுபாடு வேகமாக அதிகரித்துள்ளது. முக்கியமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாட்டால் மக்கள் மூச்சுவிடவே சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டு விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறாக மாசுபட்ட காற்றை தொடர்ந்து சுவாசித்து வருவதால் இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் குறைவதற்கான ஆபத்துகள் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் ஒட்டுமொத்தமாக காற்று மாசுபாடு கொண்ட நகரமாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகன பயன்பாடு அதிகரிப்பு காரணமாக காற்று மாசுபாடு தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவின் வடக்கு பகுதி நாட்டின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாக உள்ளதாகவும், 2022ம் ஆண்டில் காற்று மாசு தரநிலை 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும், ஆனாலும் இது தொடர்ந்தால் மக்கள் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...