follow the truth

follow the truth

May, 2, 2025
HomeTOP2வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விடய நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் நாடு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய வங்கியின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் கண்டறிந்ததை நினைவுகூர்ந்த ஜயதிஸ்ஸ, மத்திய வங்கி ஆளுநர் அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது, பாட அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்ஹின்ன பள்ளிவாசல் தொடர்பான மேன் முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை

கல்ஹின்ன ஜும்ஆப் பள்ளிவாசல் தொடர்பாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வழங்கப்பட்ட...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...