follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

வாயை மூடிக்கொள்ளுமாறு நந்தலாலுக்கு அநுர தரப்பு எச்சரிக்கை

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விடய நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் நாடு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய வங்கியின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் கண்டறிந்ததை நினைவுகூர்ந்த ஜயதிஸ்ஸ, மத்திய வங்கி ஆளுநர் அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது, பாட அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...