follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2முனீர் முளப்பர் தேசியப் பட்டியல் எம்பிக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்காதீர்கள் - ரிஷாட்

முனீர் முளப்பர் தேசியப் பட்டியல் எம்பிக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்காதீர்கள் – ரிஷாட்

Published on

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து திஹாரியில் இடம்பெறும் மக்கள் பேரணியில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்;

“..அன்று நோலிமிட் எரிந்தது, திகன, அளுத்கம எரிக்கப்பட்டன. அப்போதும் இப்போதும் ஏன், அன்று ஈஸ்டர் தாக்குதலில் பலர் கைதானார்கள் அப்போதும் நாம் ஓடி ஓடி உங்களுக்காக பாடுபட்டோம். நன்றி மறக்காதீர்கள் அப்போது இரவு பகல் பாராமல் நாம் உங்களுக்காக இருந்தோம். வாக்குக் கேளுங்கள் ஆனால் எங்களை ஏசி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். நீங்கள் தேசியப் பட்டியல் எம்பி பெறுவதற்காக இந்த சமுதாயத்தினை ஏமாற்றி பொய் சொல்லி வாக்குக் கேட்காதீர்கள். நாங்கள் குற்றம் செய்தா சிறைக்குப் போனோம்? ஈஸ்டர்குண்டுத் தாக்குதலுக்கும் எமக்கும் என்ன தொடர்பு? அன்று நாம் குரல் கொடுத்தோம்? பாராளுமன்றில் கொதித்தெழுந்தோம்.. நான் மட்டுமா தண்டிக்கப்பட்டேன்? எனது மனைவி, மாமா, மச்சான், எனது தம்பி என்று தண்டிக்கப்படோம்.. எமது சமூகமே, தமிழ் சமூகமே, மலையக சமூகமே சிங்கள சமூகமே சஜித் பிரேமதாசவுக்காக வீடு வீடாகச் செல்லுங்கள் சஜித்திற்காக உழையுங்கள், வாக்களியுங்கள்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...