follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2அநுரவுக்கு சுகயீனம் : மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு

அநுரவுக்கு சுகயீனம் : மருத்துவ ஆலோசனைப்படி ஓய்வு

Published on

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அநுர குமார திஸாநாயக்க சற்று சுகயீனமடைந்துள்ளதாகவும் வைத்திய ஆலோசனையின் பிரகாரம் ஒரு நாள் ஓய்வு எடுப்பதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த டில்வின் சில்வா;

“.. இந்த கூட்டத்திற்கு நான் உண்மையில் வர விரும்பவில்லை. நான் இன்று பதுளைக்குச் செல்லவிருந்தேன், பதுளையில் பல பொதுக் கூட்டங்கள் இருந்தன. ஆனால் இன்று எமது தோழர் அநுர குமார திஸாநாயக்க இங்கு வரமாட்டார் என்பதனால் பதுளை செல்வதை நிறுத்திவிட்டு இங்கு வந்தேன்.

கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக தோழர் அநுர மிகவும் களைப்பாகவும் தூக்கத்துடனும் இருந்ததால் இந்த வைரஸ் காய்ச்சலால் அவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். அப்போதும் அவர் வேலை செய்தார். இன்று உடம்பு களைப்பு கொஞ்சம் அதிகமாகிவிட்டது.

எனவே, தோழர் அநுரவுக்கு ஓய்வு வழங்குமாறு வைத்தியர்கள் எமக்கு கடுமையாக கோரிக்கை விடுத்தனர். பிறகு நாளை முதல் வேலை செய்யலாம்.

தோழர் அநுர இன்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு நாளை முதல் இந்தப் பணியில் ஈடுபட விரும்புகிறார்..”

நேற்று (07) தெய்யந்தரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...