follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2உங்களிடம் ஒரு பசுமாடு இருந்தால் நாம் அதனை மந்தையாக்குவோம் - அநுர

உங்களிடம் ஒரு பசுமாடு இருந்தால் நாம் அதனை மந்தையாக்குவோம் – அநுர

Published on

மக்களுக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அரசாங்கம் தேசிய மக்கள் படையினால் அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (09) பிற்பகல் தம்புத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க,

“உங்களிடம் இருப்பதை எடுத்துச் செல்ல வரவில்லை, இருப்பதைப் பெருக்க வருகிறோம், ஒரு பசு மாடு இருந்தால், மந்தையை உருவாக்க உதவுவோம்.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்தால், இரண்டு அல்லது மூன்று ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு உதவுவேன். நீங்கள் ஒரு கடையை திறந்திருந்தால், பல நகரங்களில் கடைகளைத் திறக்க நான் உங்களுக்கு உதவுவேன்.

நீங்கள் இலங்கையில் மட்டும் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், இலங்கையை விட்டு வெளியே சென்று வியாபாரம் செய்ய உதவுவோம். அதற்காகத்தான் நாங்கள் வருகிறோம். நாட்டை ஏழ்மையாக்கி தம்மைப் பணக்காரர்களாக்க நாம் வரவில்லை.

அவர்கள் கொண்டு வர விரும்புகிறார்கள், உருவாக்க மாட்டார்கள். ..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...