follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2உங்களிடம் ஒரு பசுமாடு இருந்தால் நாம் அதனை மந்தையாக்குவோம் - அநுர

உங்களிடம் ஒரு பசுமாடு இருந்தால் நாம் அதனை மந்தையாக்குவோம் – அநுர

Published on

மக்களுக்கு உண்மையிலேயே ஆதரவளிக்கும் அரசாங்கம் தேசிய மக்கள் படையினால் அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (09) பிற்பகல் தம்புத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க,

“உங்களிடம் இருப்பதை எடுத்துச் செல்ல வரவில்லை, இருப்பதைப் பெருக்க வருகிறோம், ஒரு பசு மாடு இருந்தால், மந்தையை உருவாக்க உதவுவோம்.

ஒரு ஏக்கர் விவசாயம் செய்தால், இரண்டு அல்லது மூன்று ஏக்கர் பயிர்ச்செய்கைக்கு உதவுவேன். நீங்கள் ஒரு கடையை திறந்திருந்தால், பல நகரங்களில் கடைகளைத் திறக்க நான் உங்களுக்கு உதவுவேன்.

நீங்கள் இலங்கையில் மட்டும் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், இலங்கையை விட்டு வெளியே சென்று வியாபாரம் செய்ய உதவுவோம். அதற்காகத்தான் நாங்கள் வருகிறோம். நாட்டை ஏழ்மையாக்கி தம்மைப் பணக்காரர்களாக்க நாம் வரவில்லை.

அவர்கள் கொண்டு வர விரும்புகிறார்கள், உருவாக்க மாட்டார்கள். ..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...