follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"நான் ராஜபக்ஷர்களை பாதுகாத்திருந்தால் அவர்கள் என்னுடன் ஒரே மேடையில் இருந்திருக்க வேண்டுமே" - ஜனாதிபதி

“நான் ராஜபக்ஷர்களை பாதுகாத்திருந்தால் அவர்கள் என்னுடன் ஒரே மேடையில் இருந்திருக்க வேண்டுமே” – ஜனாதிபதி

Published on

வேறு யாரும் இல்லாத காரணத்தினால் தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றேன் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் மக்கள் துயரத்தில் இருந்த போது அவர்களுக்காக எழுந்து நிற்காததையும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பேராசையின் காரணமாகவே இப்போது அதிகாரத்தைப் பெற முன்வந்துள்ளனர் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க.

கொஸ்கம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் தெரிவிக்கையில்;

“மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள். எங்களுக்கு வலி இருந்தது. வலி இருந்ததாலே நாங்கள் பொறுப்பெடுத்தோம்.. அவர்களுக்கு வலி இருக்கவில்லையா? அவர்கள் உங்கள் வலியைப் பார்க்கவில்லையா? குழந்தைகள் பாடசாலைகளுக்கு செல்லாததை அவர்கள் பார்க்கவில்லையா? அதற்கு பதில் சொல்லுங்கள்.. நான் இங்கே வரக் காரணம் மக்களின் வலி.. நான் ராஜபக்ஷர்களை பாதுகாக்க வந்தேனாம்.. அவர்களை நான் பாதுகாத்திருந்தால் அவர்களும் இந்த மேடையில் இருந்திருக்க வேண்டுமே? அன்று வலியில் இருந்த உங்களை கைவிட்டுச் சென்றோர் இன்று வருகிறார்கள் என்றால் ஏன்? அது தான் பேராசை..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...